மனம் மாறுமோ
பட்டு புழுக்கள் பட்டாம்பூச்சிகளாக ஆவதுண்டு
பட்ட மரங்கள் பசுந்துளிர் எடுப்பதுண்டு
பச்சிளம் குழந்தைகள் பாவைகளாக மலர்வதுண்டு
பயனற்ற நிலங்களும் பசுமையான வயல்களாவதுண்டு
பஞ்சுப் பொதிகளும் பலமுள்ள ஆடைகளாவதுண்டு
பதித்த மனித கால்களால் பாதைகள் அமைவதுண்டு
பகலவன் வருகையால் பனித்துளிகள் விலகுவதுண்டு
பணிசெய்த மரங்களால் பயனுள்ள பொருள்களைக் காண்பதுண்டு
பல ஸ்வரங்களின் கோர்வையால் பாடல் உயிர்பெருவதுண்டு
பரமனின் அருள்கொண்டு பாலினம் உதிரத்தை பாலாக்குவதுண்டு
பகுத்தறிவுள்ள மனிதனின் மனம்மட்டும் தான் ஏன் மாறுவதில்லை ?
மனம் மாறுமா!!
பட்டு புழுக்கள் பட்டாம்பூச்சிகளாக ஆவதுண்டு
பட்ட மரங்கள் பசுந்துளிர் எடுப்பதுண்டு
பச்சிளம் குழந்தைகள் பாவைகளாக மலர்வதுண்டு
பயனற்ற நிலங்களும் பசுமையான வயல்களாவதுண்டு
பஞ்சுப் பொதிகளும் பலமுள்ள ஆடைகளாவதுண்டு
பதித்த மனித கால்களால் பாதைகள் அமைவதுண்டு
பகலவன் வருகையால் பனித்துளிகள் விலகுவதுண்டு
பணிசெய்த மரங்களால் பயனுள்ள பொருள்களைக் காண்பதுண்டு
பல ஸ்வரங்களின் கோர்வையால் பாடல் உயிர்பெருவதுண்டு
பரமனின் அருள்கொண்டு பாலினம் உதிரத்தை பாலாக்குவதுண்டு
பகுத்தறிவுள்ள மனிதனின் மனம்மட்டும் தான் ஏன் மாறுவதில்லை ?
மனம் மாறுமா!!
No comments:
Post a Comment