Friday, 22 April 2016

மனம் மாறுமோ

மனம் மாறுமோ 

பட்டு புழுக்கள் பட்டாம்பூச்சிகளாக ஆவதுண்டு 
பட்ட மரங்கள் பசுந்துளிர் எடுப்பதுண்டு 
பச்சிளம் குழந்தைகள் பாவைகளாக மலர்வதுண்டு 
பயனற்ற நிலங்களும் பசுமையான வயல்களாவதுண்டு 
பஞ்சுப் பொதிகளும் பலமுள்ள ஆடைகளாவதுண்டு 
பதித்த மனித கால்களால் பாதைகள் அமைவதுண்டு 
பகலவன் வருகையால் பனித்துளிகள் விலகுவதுண்டு 
பணிசெய்த மரங்களால் பயனுள்ள பொருள்களைக் காண்பதுண்டு 
பல ஸ்வரங்களின் கோர்வையால் பாடல் உயிர்பெருவதுண்டு 
பரமனின் அருள்கொண்டு பாலினம் உதிரத்தை பாலாக்குவதுண்டு 
பகுத்தறிவுள்ள மனிதனின் மனம்மட்டும் தான் ஏன் மாறுவதில்லை ? 

மனம் மாறுமா!!

No comments:

Post a Comment