Friday, 22 April 2016

அமைதி காக்க

அமைதியை காக்க வேண்டி 
அரும்பாடுபட்டு அனுமதியுடன் 
படைதனை அமைத்த பின்பு 
பயன்பெறும் வகையில் பயணிகளை 
பாதுகாப்பு சோதனை செய்தபின் 
பறப்பதற்கு அனுப்பும் கால் 
பகைவனும் அனுமதி பெற்று 
பறந்து பாமரர்களை அழிக்க 
பாரினில் நிகழும் இக்கொடுமை 
பயம்தனை மனதில் தூண்டி 
பரமன் அருள் வேண்ட மனம் விழையுதே

No comments:

Post a Comment