Friday, 22 April 2016

தமிழோடுதான் நான் வாழ்வேன்

கண்ணோடு தான்காதல் மெல்லவே பூத்திடும் 
மண்ணோடு தான்மரு தம்தழைத் தோங்கிடும் 
விண்ணோடு தான்வெண் ணிலாஉலாவும் செந்தமிழ்ப் 
பண்ணோடு தான்நான்வாழ் வேன் 

---கவின் சாரலன் 
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா 

ஈற்றடியை சற்று மாற்றி இப்படியும் படிக்கலாம் 

கண்ணோடு தான்காதல் மெல்லவே பூத்திடும் 
மண்ணோடு தான்மரு தம்தழைத் தோங்கிடும் 
விண்ணோடு தான்வெண் ணிலாஉலாவும் செந்தமிழ்ப் 
பண்ணோடு தான்நான் எழுதும் கவிதமிழ் 
பெண்ணோடு தான்எனது வாழ்வு 

----இது ப ஃ றொடை வெண்பா என்பதை நீங்கள் அறிவீர்கள்

No comments:

Post a Comment