Friday, 22 April 2016

உயிர் தமிழ்

அழகு பொங்கும் தமிழை எழுதும் போது 
ஆசை வெளிப்படும் தாய்மொழியை ஓதும் போது 
இலட்சியம் உடையாமல் திடமாகும் 
ஈழத்தை தீயிலிருந்து காக்க வேண்டி… 
உயிரை இழக்கும் துயரம் வந்தாலும் 
ஊர் சேர்ந்து தூரம் எரிவோம் துரோகிகளை… 
எண்ணங்களை தெளிவாய் இணைத்து 
ஏணியாக்கி தேசத்தைக் காப்போம்… 
ஐயம் இன்றி வாழ்ந்து தைரியம் வளர்ப்போம்… 
ஒற்றுமையாய் வாழ்ந்து தொல்லைகளை (திவிரவாதத்தை) ஒழிப்போம். 
ஓகோ என கலாச்சாத்தோடு வாழ்வோம் 
அஃதே தமிழர் என்றுச் சொல்லி…

1 comment:

  1. thamizhaipatti kooriyavai sari irupinum kalasaram kalachaaram ena ullathu.

    ReplyDelete